tet exam result 2012
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்
கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2,88,588 பேர் எழுதிய முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 3,88,185 பேர் எழுதிய இரண்டாம் தாளில் 713 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 83 என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மறுதேர்வுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.